ஆதிவசிஷ்டரை பிரம்ம தேவரின் மனுபுத்திரன் என்று சொல்லுகிறார்கள் . முதலில்
பிரம்மரிஷி வசிஷ்டர் பிரம்மதேவரின் மூச்சிலிருந்து தோன்றினார் . அடுத்து
பிரம்மாவால் உருவாக்கப்பட்ட அக்னியிலிருந்து வசிஷ்டர் தோன்றினார் .
மூன்றாவது முறையாக ஊர்வசியின் அழகில் மயங்கிய வருணபகவான் மூலமாக விழுந்த
விதையிலிருந்து தோன்றினார் . வசிஷ்டர் , கர்தாம் என்பவரின் மகள், கபிலரின்
சகோதரியுமான அருந்ததியை மணந்து கொண்டார் . கணவனையே உலகமென்று நினைத்து
வாழ்பவளை அருந்ததி என்று அழைக்கலாம் . இத்தகைய நல்ல குணங்களைக் கொண்ட
அருந்ததி வானத்தில் நட்சத்திரமாகத் திகழ்கிறாள் .
திருமணமான
புதிய தம்பதியர்கள் சந்தோசமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அருந்ததி
நட்சத்திரத்தைப் பார்ப்பது வழக்கமாகும் . வசிஷ்டருக்கும் நிமி அரசருக்கும்
சிறிய வாக்குவாதம் நடந்தது . இதனால் வசிஷ்டர் சூரிய வம்சத்திலிருந்து
விலகிக் கொண்டு இச்சவாகு வம்சத்தின் பூசாரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
வசிஷ்டர் தசரத மகாராஜாவிற்கு புத்திரபாக்கிய யாகத்தை நடத்தி வைத்தார் .
வசிஷ்டர் தசரதரின் முதல் புத்திரன் ஸ்ரீராமருக்கு குருவாக இருந்து சகல
வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் .
வசிஷ்டர்
, விஷ்வாமித்திரருக்கு இடையே சிறிய போராட்டம் நடந்தது . வசிஷ்டர் வாயால்
தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று விஷ்வாமித்திரர்
ஆசைப்பட்டார் . விஷ்வாமித்திரர், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நந்தினி பசுவையை நாடினார் . ஆனால் வசிஷ்டர் நந்தினியை ஆஸ்ரம யாகத்திற்காக அனுப்பி
வைத்தார் . எதற்கும் மசியாத வசிஷ்டரை அழிக்க விஷவாமித்திரர் ஆயுதத்தோடு
அவருடைய குடிசைக்கு இரவு வேளையில் நுழைந்தார் . அப்போது வசிஷ்டர்
அருந்ததியிடம் விஷ்வாமித்திரரின் சிறப்பை சொல்லிக் கொண்டார் .
தன்மீது உயர்ந்த எண்ணத்தைக் கொண்ட வசிஷ்டரை அழிக்க நினைத்ததை
எண்ணி மன வேதனைப்பட்டார் . உடனே வசிஷ்டரின் பாதங்களில் விழுந்தார் .
வசிஷ்டரும் விஷ்வாமித்திரரை தழுவிக் கொண்டு அவரை பிரம்மரிஷி என்று
அழைத்தார் . யோக வசிஷ்டர் ராமாயணம் , ஸ்ரீராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே
நிகழ்ந்த உரையாடலை பற்றிச் சொல்லுகிறது . பிரம்மரிஷி வசிஷ்டரும் சப்த
ரிஷிகளில் ஒருவராக கருதப் படுகிறார் .
No comments:
Post a Comment